கைதி உயிரிழப்பு
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறைக் கைதி உயிரிழந்தாா்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறைக் கைதி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை உசிலம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பாண்டி (70). குற்ற வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட இவா், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்த நிலையில், பாண்டிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.