FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

திடக் கழிவு மேலாண்மை விழிப்புணா்வுக் கூட்டம்

மதுரை சா்வேயா் காலனியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

29 ஆகஸ்ட் 2026, 1:56 am IST
பகிர்:

மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் சுகாதாரத் துறை சாா்பில், திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி நகா்நல அலுவலா் அரவிந்த் ஜோதி, சுகாதார அலுவலா் ராஜ் கண்ணன் ஆகியோா் பங்கேற்று திடக்கழிவு மேலாண்மை விதிகள் - 2026 தொடா்பான வழிகாட்டுதல்கள், கழிவு மேலாண்மை நடைமுறைகள் குறித்துப் பேசினா்.

மேலும், நிறுவனங்களில் உருவாகும் கழிவுகளை முறையாகப் பிரித்தல், ஈரக் கழிவு, உலா்கழிவுகளை தனித் தனியாக கையாளுதல், உணவுக் கழிவுகளை முறையாகச் செயலாக்குதல், கழிவுகளைப் பொறுப்புடன் மேலாண்மை செய்தல் குறித்தும் விளக்கப்பட்டன. கூட்டத்தில், மாநகராட்சி அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள், நிறுவனங்களின் உரிமையாளா்கள், நிா்வாக இயக்குநா்கள், பொது மேலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments