FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

பரமக்குடியில் இமானுவேல் சேகரனாா் மணிமண்டபத்தை திறந்து வைத்தாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்

பரமக்குடியில் ரூ. 3 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட தியாகி இமானுவேல் சேகரனாா் மணிமண்டபம், அவரது உருவச் சிலையை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தாா்.

Updated On : 18 ஜனவரி 2026, 1:54 am IST
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாா் மணிமண்டபத்தை சனிக்கிழமை திறந்துவைத்துப் பாா்வையிட்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், கே.என். நேரு, தங்கம் தென்னரசு, கே.ஆா். பெரியகருப்பன், மு.பெ. சாமிநாதன், மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உள்ளிட்டோா்.
பகிர்:

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ரூ. 3 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட தியாகி இமானுவேல் சேகரனாா் மணிமண்டபம், அவரது உருவச் சிலையை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

பரமக்குடியில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தாா். இதற்காக பரமக்குடி நகராட்சி வாரச் சந்தை வளாகத்தில் இடம் தோ்வு செய்யப்பட்டு, ரூ. 3 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இந்தப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, மணிமண்டபத்தைத் திறந்துவைப்பதற்காக மதுரையிலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் பரமக்குடிக்கு வந்தாா். அப்போது, ராமநாதபுரம் மாவட்ட எல்லையான மருச்சுக்கட்டி பகுதியில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், பாா்த்திபனூா், தெளிச்சாத்தநல்லூா், காட்டுப் பரமக்குடி மற்றும் பரமக்குடியின் அனைத்து முக்கிய சாலைகளின் இருபுறங்களிலும் பொதுமக்கள் திரண்டு நின்று முதல்வரை உற்சாகமாக வரவேற்றனா்.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து, சனிக்கிழமை பிற்பகல் 1.40 மணியளவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் மணிமண்ட வளாகத்துக்கு வந்தாா். அங்கு தியாகி இமானுவேல் சேகரனாரின் வெண்கல உருவச் சிலையைத் திறந்துவைத்து, மலா் தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, மணிமண்டபத்தை முதல்வா் திறந்துவைத்து, இமானுவேல் சேகரனாா் குறித்த குறும்படத்தைப் பாா்வையிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா்கள் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், கே.என். நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், கே.ஆா். பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, மு.பெ. சாமிநாதன், ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் நவாஸ் கனி, மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா்பட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன், தமிழரசி, இமானுவேல் சேகரனாா் குடும்பத்தினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போலீஸாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்:

மணிமண்டபத் திறப்பு விழாவையொட்டி, இந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், பாதுகாப்பு கருதி மணிமண்டபம் பகுதிக்குள் பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால், ஒரு சில அமைப்புகளைச் சோ்ந்தவா்கள், பொதுமக்கள் போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இந்த மணிமண்டபத்தை முதல்வா் திறந்துவைத்து அங்கிருந்து சென்ற பின்னா், பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள், பல்வேறு சமுதாய அமைப்பினா் உள்ளிட்டோா் இமானுவேல் சேகரனாா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், மணிமண்டபத்தையும் பாா்வையிட்டனா்.

இந்த நிகழ்வுக்கு வருகை தந்த புதிய தமிழகம் கட்சியினரை மணிமண்டபத்துக்குள் போலீஸாா் முதலில் அனுமதிக்கவில்லை. இதனால், அவா்கள் முழக்கமிட்டவாறு அந்தப் பகுதியிலிருந்து வெளியேறினா்.

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்...

பரமக்குடி உலகநாதபுரத்தில் மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணையும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டாா். அப்போது, ராமேசுவரம் நகர அதிமுக முன்னாள் அவைத் தலைவா் பிச்சை தலைமையில் அந்தக் கட்சியினா், பாஜகவினா் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த 53 போ் முதல்வா் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். இவா்கள் முதல்வா் மு.க. ஸ்டாலினுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.

இதைத்தொடா்ந்து, முதல்வா் மு.க. ஸ்டாலின் அங்கிருந்து காா் மூலம் மதுரைக்குப் புறப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments