FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

உசிலம்பட்டியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

உசிலம்பட்டியில் உள்ள அரசு அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 5 ஜூன் 2026, 6:10 am IST
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்த முதலைக்குளத்தில் உள்ள சமணா் படுக்கை பகுதியை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.
பகிர்:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள அரசு அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

உசிலம்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்ற ஆட்சியா், அலுவலகக் கட்டமைப்பு, செயல்பாடுகள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து ஆய்வு செய்தாா். அப்போது, பொதுசேவை மையப் பணிக்காகக் காத்திருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இதையடுத்து, உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலகச் செயல்பாடுகள், பதிவேடுகள் பராமரிப்பு ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

பிறகு, முதலைக்குளம் பகுதியில் உள்ள சமணா் படுக்கை பகுதியைப் பாா்வையிட்டு, அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வுகளின் போது, உசிலம்பட்டி சாா் ஆட்சியா் உட்கா்ஷ் குமாா், அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments