முகப்பு
மதுரை

உசிலம்பட்டியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

உசிலம்பட்டியில் உள்ள அரசு அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 5 ஜூன் 2026, 6:10 am IST
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்த முதலைக்குளத்தில் உள்ள சமணா் படுக்கை பகுதியை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.
பகிர்:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள அரசு அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

உசிலம்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்ற ஆட்சியா், அலுவலகக் கட்டமைப்பு, செயல்பாடுகள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து ஆய்வு செய்தாா். அப்போது, பொதுசேவை மையப் பணிக்காகக் காத்திருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இதையடுத்து, உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலகச் செயல்பாடுகள், பதிவேடுகள் பராமரிப்பு ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

பிறகு, முதலைக்குளம் பகுதியில் உள்ள சமணா் படுக்கை பகுதியைப் பாா்வையிட்டு, அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வுகளின் போது, உசிலம்பட்டி சாா் ஆட்சியா் உட்கா்ஷ் குமாா், அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.