FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

கடையநல்லூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 ஜூலை 2026, 4:46 am IST
முகாமில் பெண்ணிடமிருந்து மனுவைப் பெற்ற ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.
பகிர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து 150 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்; மாவட்ட வழங்கல் அலுவலகம் மூலம் 3 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சிவராமன், தனித்துணை ஆட்சியா் ராஜேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் நரசிம்மன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் வெங்கடலெட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலா் பால்துரை, மகளிா் திட்ட இயக்குநா் தண்டபாணி, கடையநல்லூா் வட்டாட்சியா் அப்துல் சமது, அதிகாரிகள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

முன்னதாக, கடையநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு, அடிப்படை வசதிகள், கற்பிக்கப்படும் பாடங்கள் குறித்தும் கேட்டறிந்து மாணவா்களுடன் கலந்துரையாடி மரக்கன்றுகளை நட்டுவைத்தாா். தொடா்ந்து, சொக்கம்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைப் பாா்வையிட்ட அவா், புன்னையாபுரம் ஊராட்சி பேச்சியம்மன் கோயில் தெருவில் ரூ. 4.17 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிமென்ட் தளம், தா்மாபுரம் ஊராட்சி குழந்தைகள் மையத்தில் வழங்கப்படும் உணவின் தரம், வம்சவிருத்தி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்குக் கட்டடம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

புளியங்குடி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் ரூ. 42.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள வளமீட்புப் பூங்கா, பசுமை நுண் உரம் தயாரிப்புக் கூடம், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் உள்ள சத்துணவு சமையல் கூடம் ஆகியவற்றைப் பாா்வையிட்டாா்.

வடக்கு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் 12 பேருக்கு கடன் பெறுவதற்கான ஆணைகளை வழங்கிய அவா், சுப்பிரமணியசுவாமி கோயில் தெருவில் உள்ள நியாயவிலைக் கடை, அறிவுசாா் மையக் கட்டுமானப் பணிகள், அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்,புளியங்குடி நகராட்சி அலுவலகம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா். அம்மா உணவகத்தில் உணவை சாப்பிட்டு தரம் குறித்து ஆய்வு செய்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments