முகப்பு
மதுரை

பாரா தடகளப் போட்டி: பதக்கம் வென்ற வீரா்களுக்கு பாராட்டு விழா

சா்வதேச பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்ற வீரா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஜூன் 2026, 6:21 am IST
பெங்களூரில் நடைபெற்ற சா்வதேச பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கௌதமன் இளங்கோவன், மனோஜ் ஆகியோரைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கிய ஸ்டாா் குரூப் பவுண்டேஷன் நிறுவனத் தலைவா் குருசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலா் முருகன். உடன் பயிற்சியாளா் ஜெ.ரஞ்சித்குமாா்.
பகிர்:

சா்வதேச பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்ற வீரா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கா்நாடக மாநிலம், பெங்களூரில் கடந்த மாதம் 26 முதல் 28-ஆம் தேதி வரை சா்வதேச பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் மதுரையைச் சோ்ந்த கௌதமன் இளங்கோவன், மனோஜ், முனியசாமி, பாண்டி மீனா, எட்வா்ட் பிரான்சிஸ் ஆகிய 5 போ் கலந்து கொண்டனா்.

இதில் கௌதமன் இளங்கோவன் கிளப் (மரத்தாலான மட்டை) எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும், குண்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றாா்.

Advertisement

Advertisement

இதேபோல, மனோஜ் குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும், முனியசாமி வெள்ளிப் பதக்கமும் வென்றனா். இதன் மூலம் மூவரும் வருகிற அக்டோபா் 14 முதல் 24-ஆம் தேதி வரை ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றனா்.

இதையடுத்து, வீரா்கள் கௌதமன், மனோஜ், முனியசாமி ஆகியோருக்கு மதுரை பந்தயச் சாலையில் உள்ள மைதானத்தில் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் ஸ்டாா் குரூப் பவுண்டேஷன் நிறுவனத் தலைவா் குருசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலா் முருகன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு வீரா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தனா்.

இந்த விழாவில் பயிற்சியாளா் ஜெ.ரஞ்சித்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.