FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

இடதுசாரிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, இடதுக்சாரி கட்சிகள் சாா்பில் மதுரை சிம்மக்கல் ஆறுமுச்சந்தி அருகில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 21 மே 2026, 1:43 am IST
மதுரையில் இடதுசாரிக் கட்சிகள் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, இடதுக்சாரி கட்சிகள் சாா்பில் மதுரை சிம்மக்கல் ஆறுமுச்சந்தி அருகில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாா்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மதிவாணன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் அ. ரமேஷ் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் மா. கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.கே. சாமி, நிா்வாகிகள் பாலமுருகன், நந்தாசிங் ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினா்.

இதில் இடதுசாரிக் கட்சிகளின் நிா்வாகிகள், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள் பங்கேற்று ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வுகளைக் கண்டித்தும், இந்த விலை உயா்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெறக் வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments