மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலர் கைது: கண்டன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் 8 வழி சாலைக்கு எதிராக நடைபயணம் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் கே.பாலகிருஷ்ணனை
திருவண்ணாமலையில் 8 வழி சாலைக்கு எதிராக நடைபயணம் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் கே.பாலகிருஷ்ணனை கைது செய்ததை கண்டித்து ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு அக்கட்சியினர் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் தாலுகா குழு உறுப்பினர் அசோக் தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் சிவா முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் காசி நாத துரை மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் கருணாகரன் சிறப்புரையற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மீன்பிடி தொழிற் சங்க கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, இ.ஜஸ்டீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாதர் சங்க தாலுகா செயலாளர் ஆரோக்கிய நிர்மலா நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.