முதுகுளத்தூரில் மண்டல பூஜை விழா கொடியேற்றம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சுப்பிரமணியர் ஆலயத்திற்குள் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சுப்பிரமணியர் ஆலயத்திற்குள் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் பாலகுருசாமி ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் வரும் 27 ஆம் தேதி மண்டல பூஜை விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஐயப்பன் சன்னதி முன்பு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பக்தர்கள் குழு குருநாதர் அ.திருமால் தலைமை வகித்தார். கௌரவ தலைவர், மூத்த வழக்குரைஞர் கோவிந்தசாமி, துணை குருசாமி பி.முருகானாந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாலை அணிந்து விரதமிருக்கும் ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.