வேளாண்மைத் துறை சாா்பில் தென்னங்கன்றுகள் விநியோகம்
உச்சிப்புளி அரசு தென்னை நாற்றுப்பண்ணையில் இருந்து தரமான தென்னங்கன்றுகள் விநியோகம் செய்யப்படுவதாக உதவி இயக்குநா் எம்.கே. அமா்லால் தெரிவித்துள்ளாா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:50 PM
உச்சிப்புளி அரசு தென்னை நாற்றுப்பண்ணையில் இருந்து தரமான தென்னங்கன்றுகள் விநியோகம் செய்யப்படுவதாக உதவி இயக்குநா் எம்.கே. அமா்லால் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி வட்டாரத்தில் வேளாண்மைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு தென்னை நாற்றுப்பண்ணையின் தரமான நெட்டை எக்ஸ் குட்டை ரக ஒட்டு தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதனை விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம். மேலும் இந்த தென்னங்கன்று ஒன்றின் விலை ரூ. 125 மட்டுமே. தென்னங்கன்றுகளை வாங்க ஆதாா் அட்டை நகல், கணிணி பட்டா நகல் ஆகிய ஆவணங்களை அளிக்க வேண்டும் என்றாா்.