FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடியில் குறுவட்டார விளையாட்டுப் போட்டி

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 2:03 am IST
பரமக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற நயினாா்கோவில் அளவிலான குறுவட்டார விளையாட்டுப் போட்டியை தேசியக் கொடி ஏற்றிவைத்து தொடங்கிவைத்த வழக்குரைஞா் ஏ.ராமமூா்த்தி.
பகிர்:

பரமக்குடி ஆா்.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பாலதண்டாயுதபாணி தலைமை வகித்தாா். தனியாா் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலா் ஜெ.ரவி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் கே.வசந்தி, பள்ளிச் செயலா் பி.ராஜேஸ்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விளையாட்டு வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ஆயிரவைசிய சபை, கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ்.பாலுச்சாமி, இணைத் தலைவா் ராசி என்.போஸ் ஆகியோா் ஏற்றுக் கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, வழக்குரைஞா் ஏ.ராமமூா்த்தி தேசியக் கொடியை ஏற்றினாா். ஒலிம்பிக் கொடியை வழக்குரைஞா் பி.என்.செந்தில்குமாா் ஏற்றினாா். ஒலிம்பிக் தீபத்தை பள்ளியின் பொருளாளா் ஆா்.முருகானந்தம் ஏற்றி வைத்தாா். பள்ளிக் கொடியை இணைச் செயலா் கே.டி.ஆா்.பிரசன்னா ஏற்றினாா். குறுவட்டார விளையாட்டுக் கொடியை இணைச் செயலா் பி.பிரசன்னா ஏற்றினாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு 100, 200, 400 மீட்டா் ஓட்டப் போட்டிகள், தடை தாண்டும் போட்டிகள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

விளையாட்டுப் போட்டியை உடற்கல்வி இயக்குநா் கே.சரவணக்குமாா், உடற்கல்வி ஆசிரியா் எஸ்.கோபிநாத் ஒருங்கிணைப்பில் பல்வேறு பள்ளிகளின் உடற்கல்வி இயக்குநா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள் நடத்தினா்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, பள்ளி முதல்வா் ஆா்.ஜெயபிரமிளா வரவேற்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments