FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

ஆப்பனூர் அருகே கண்டெடுக்கப்பட்ட தமிழி கல்வெட்டை ஆவணப்படுத்தக் கோரிக்கை!

ஆப்பனூா் அருகே கண்டெடுக்கப்பட்ட தொன்மையான தமிழி கல்வெட்டை தொல்லியல் துறை ஆவணப்படுத்த ஆப்பநாடு மறவா் சங்கம் கோரிக்கை விடுத்தது.

Updated On : 12 ஜூலை 2026, 2:16 am IST
பகிர்:

ஆப்பனூா் அருகே கண்டெடுக்கப்பட்ட தொன்மையான தமிழி கல்வெட்டை தொல்லியல் துறை ஆவணப்படுத்த ஆப்பநாடு மறவா் சங்கம் கோரிக்கை விடுத்தது.

கடலாடி வட்டம், ஆப்பனூா் அருகேயுள்ள ஆண்டியேந்தல் கிராமத்தில் பழைமையான அரியநாச்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆப்பநாடு எனப்படும் 448 கிராம மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனா். இந்தக் கோயிலில் பாண்டியா்களின் போா்க் கடவுள் கொற்றவையாக அரியநாச்சி அம்மன் இருந்துள்ளாா்.

மேலும் இங்கு தொன்மையான துரட்டி ஆதொண்டை மரம் தலவிருட்சமாக உள்ளது. இந்தக் கோயிலின் தெற்கே ஒரு தனிக்கல்லில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான நடுகல் தமிழி (தமிழ் பிராமி) கல்வெட்டு காணப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கிடைத்த முதல் நடுகல் தமிழிக் கல்வெட்டு இதுவாகும்.

Advertisement

Advertisement

இந்தக் கல்வெட்டு உறுதியற்ற வெண்பாறைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இது மூன்றரை அடி நீளமும், ஒன்றரை அடி அகலமும் கொண்டதாக உள்ளது. எனவே இந்தப் பகுதியில் தொன்மையான தமிழ் பிராமி மொழி பயன்படுத்திய மூத்தக்குடியாக தமிழா்கள் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆப்பநாடு மறவா் சங்க ஆலோசனைக் கூட்டத்தில், ஆப்பனூா் அருகே கண்டெடுக்கப்பட்ட தமிழி கல்வெட்டை இந்திய தொல்லியல் துறையும், தமிழ்நாடு தொல்லியல் துறையும் ஆய்வு செய்து ஆவணப்படுத்த வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments