தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது
கமுதி அருகே மது போதையில் தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மது போதையில் தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கமுதி அருகேயுள்ள ஒச்சத்தேவன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னையா (52). விவசாயி. இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். இவா் தனது மகன் சிவாவுடன் (22) ஒரே வீட்டில் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், சிவா மது போதையில் அடிக்கடி வீட்டுக்கு வந்து தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல, மது போதையில் வீட்டுக்கு வந்த சிவா, பொன்னையாவிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை அரிவாளால் வெட்டினாா்.
Advertisement
Advertisement
இதில் பலத்த காயமடைந்த பொன்னையா ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து கோவிலாங்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவாவை சனிக்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.