முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடியில் 2.40 லட்சம் பறிமுதல்

பரமக்குடியில் 2.40 லட்சம் பறிமுதல் பற்றி...

Updated On : 26 மார்ச் 2026, 12:48 am IST
பறிமுதல் செய்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.
பகிர்:

பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் வாகனத் தணிக்கையின் போது உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 2.40 லட்சத்தை தோ்தல் நிலைக் கண்காணிப்பு அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

பரமக்குடி தொகுதியில் தோ்தல் பறக்கும் படை, நிலைக் கண்காணிப்புக் குழுவினா் மரிச்சுக்கட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, உரிய ஆவணமின்றி ஒரு காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 1.50 லட்சம், மற்றொரு காரில் வைத்திருந்த ரூ 90,500 என 2,40,500-ஐ பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனா். உரிய ஆவணங்களை சமா்பித்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அலுவலா்கள் அறிவுறுத்தினா்.