சீமைக் கருவேல மரங்களை அகற்றிக்கொள்ள அறிவுறுத்தல்
காரைக்குடி நகராட்சி பகுதியில் தனியார் இடங்களில் வளர்ந்திருக்கும் கருவேலமரங்களை நில உரிமையளர்களே அகற்றிக்கொள்ளவேண்டும் என்று நகராட்சி ஆணையர் பெ. விஜயலெட்சுமி தெரிவித்துள்ளார்.
காரைக்குடி நகராட்சி பகுதியில் தனியார் இடங்களில் வளர்ந்திருக்கும் கருவேலமரங்களை நில உரிமையளர்களே அகற்றிக்கொள்ளவேண்டும் என்று நகராட்சி ஆணையர் பெ. விஜயலெட்சுமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் கோட்டையூர் நாட்டார் ரிசிவர் பெயரில் உள்ள 1.35 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடங்களிலும், இலுப்பக்குடி தேவஸ்தானத்திற்குச் சொந்தமான 2.38 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடங்களிலும், தனியாருக்குச் சொந்தமான 3.65 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.
இந்த மரங்களை அந்த இடங்களைச் சேர்ந்தோர் தாங்களே அகற்றிக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் நகாரட்சிஅலுவலகம் மூலம் அகற்றி அதற்குரிய செலவு தொகை வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.