பள்ளி மாணவிகளுக்கு வட்டார விளையாட்டுப் போட்டிகள்
சிவகங்கை கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு இடையே வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு இடையே வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற இப்போட்டிகளை சிவகங்கை கல்வி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்(பொறுப்பு) சூரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில், கால்பந்து போட்டியில் 15 அணிகளும், ஹாக்கிப் போட்டியில் 11 அணிகளும், பாட்மிண்டன் போட்டியில் 21 அணிகளும் மோதின. போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கீழப்பூங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் முனியாண்டி, உடற்கல்வி ஆசிரியர்கள் பாக்கியநாதன், ராமலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.