பைக் மீது பேருந்து மோதல் இளைஞர் சாவு
திருப்புவனம் அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
திருப்புவனம் அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
திருப்புவனம் அருகே கணக்கன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பூமிநாதன் (21), மாயகிருஷ்ணன். இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் திருப்புவனம் வந்துவிட்டு கிராமத்துக்கு திரும்பிச் சென்றனர். பூமிநாதன் அதை ஓட்டி வந்தார். திருப்புவனம் அருகே டி.பாப்பான்குளம் விலக்கு பகுதியில் வந்தபோது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
பின்னர் அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட னர். ஆனால் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை மாலை பூமிநாதன் உயிரிழந்தார். திருப்புவனம் போலீஸார் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.