FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நெற்குப்பையில் தமிழண்ணல் பிறந்த நாள் விழா

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில் உள்ள சோமலெ. நினைவு கிளை நூலகத்தில் செவ்வாய்க்கிழமை தமிழண்ணல் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில் உள்ள சோமலெ. நினைவு கிளை நூலகத்தில் செவ்வாய்க்கிழமை தமிழண்ணல் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
 வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழண்ணலின் புதல்வர் மணிவண்ணன் தலைமை வகித்தார்.விழாவின் சிறப்பு அழைப்பாளராக முனைவர் மு.பழனியப்பன் கலந்து கொண்டு  தமிழண்ணல் குறித்து சிறப்புரையாற்றினார். பின்னர் அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு கதை மற்றும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கபட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வாசகர் வட்டம் மற்றும் நூலகத்தினர் செய்திருந்தனர். விழாவில் நூலகர் கண்ணன் வரவேற்றார்.  முடிவில் வாசகர் வட்டத் தலைவர் அழகியமெய்யர் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments