புனித அலங்கார அன்னை தேர் பவனி
சிவகங்கையில் உள்ள புனித அலங்கார அன்னை பேராலய திருவிழாவை முன்னிட்டு தேர் பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள புனித அலங்கார அன்னை பேராலய திருவிழாவை முன்னிட்டு தேர் பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
கடந்த ஆக.6 ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, உலக நன்மை வேண்டியும், மழை பெய்து வேளாண் பணி சிறக்கவும் செபமாலை, நவநாள் பிரார்த்தனை, சிறப்பு திருப்பலி ஆகியன நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான நற்கருணை ஆராதனை, தேர்பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இவ்விழாவுக்கு சிவகங்கை மறை மாவட்ட முதன்மைச் செயலர் பாக்கியநாதன் தலைமை வகித்தார்.அதன்பின்னர், புனித அலங்கார அன்னையின் தேர்பவனி நடைபெற்றது. ஆலயத்தின் முன்பு தொடங்கிய தேர்பவனி,மதுரை விலக்கு சாலை, திருப்பத்தூர் சாலை,சத்திய மூர்த்தி தெரு, காந்தி வீதி,அரண்மனை வாசல்,நேரு கடை வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பின்னர் மீண்டும் ஆலயத்திற்கு வந்தடைந்தது. இதில், அருட்பணி தந்தையர்கள் ஜோ.ஆரோக்கியராஜ்,பிரிட்டோ, பர்மா ஆலயத்தின் பங்கு தந்தை ஜோஜப், சிவகங்கை புனித அலங்கார அன்னை பேராலயத்தின் பங்கு தந்தையர்கள் மரியடெல்லஸ், வல்லபதாஸ், சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.