கோவிலூரில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
காரைக்குடி அருகே கோவிலூரில் வியாழக்கிழமை சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 2.5 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
காரைக்குடி அருகே கோவிலூரில் வியாழக்கிழமை சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 2.5 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
கோவிலூர் முத்துராமலிங்கம் நகரைச் சேர்ந்தவர் செல்வி (55). இவர் தனது வீட்டிலிருந்து கோவிலூர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாராம். அப்போது, இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த 3 பேர், செல்வி அணிந்திருந்த இரண்டரை பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர். இது குறித்து குன்றக்குடி காவல் நிலையத்தில் செல்வி அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.