அரசு விருது பெற்ற பள்ளிக்குப் பாராட்டு
தமிழக அரசின் விருதுபெற்ற, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சி.எஸ்.ஐ. செவித்திறன் குறைவுடையோர் பள்ளிக்கு
தமிழக அரசின் விருதுபெற்ற, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சி.எஸ்.ஐ. செவித்திறன் குறைவுடையோர் பள்ளிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
இப் பள்ளி கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கி வருகிறது. இதையடுத்து தமிழக அரசு இப் பள்ளியை சிறந்த பள்ளியாக தேர்வு செய்து விருது வழங்கியுள்ளது.
இதையடுத்து, திங்கள்கிழமை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மானாமதுரை கிளை நிர்வாகிகள் தேவதாஸ், முத்துராமன், ரவீந்திரக்குமார், செல்வகதிரவன், ராஜாராமன் உள்ளிட்டோர் பள்ளிக்குச் சென்று தலைமையாசிரியர் மெர்சிஜெயசீலியை சந்தித்து பாராட்டு தெரிவித்து பாரதியார், பாரதிதாசன் உருவம் பொறித்த பரிசையும் பள்ளிக்கு வழங்கினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.