அழகப்பா பல்கலைக்கழகத்தில் மனித உரிமை பயிற்சி முகாம்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சமூக பணித்துறை மற்றும் புதுதில்லி தேசிய மனித உரிமை ஆணையம் சார்பில் ஒருநாள்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சமூக பணித்துறை மற்றும் புதுதில்லி தேசிய மனித உரிமை ஆணையம் சார்பில் ஒருநாள் மனித உரிமை பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பல்கலை. துணைவேந்தர் நா. ராஜேந்திரன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்துப் பேசியது: சகிப்புத்தன்மையும், இணக்கமாக இருத்தலும் மனித உரிமைகளின் அடிப்படையாகும். மனித உரிமையின் முக்கியக் கருத்துகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவைகளை பிரெஞ்சுப் புரட்சி வலியுறுத்தியது என்றார். இம்முகாமில், திருச்சி மனித உரிமை இயக்ககத்தின் திட்ட இயக்குநர் ராஜா முத்திருளாண்டி சிறப்புரையாற்றினார். பேராசிரியர் கு.பா. கணேசன் வாழ்த்திப்பேசினார். பேராசிரியர் கா. மணிமேகலை, ஞானவில் அமைப்பு இயக்குநர் சிரில், திருச்சி அரசு சட்டக்கல்லூரி துணை பேராசிரியர் க. லதா உள்ளிட்டோர் முகாமில் பயிற்சியளித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.