ஜனநாயக வாலிபர் சங்க பேரவைக் கூட்டம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். மானாமதுரை ஒன்றியம் மேலப்பசலை ஊராட்சி வான்புரம் கிராமத்திற்கு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் குடிநீர் வசதி செய்து தர வேண்டும். மானாமதுரை வைகையாற்று மேம்பாலத்தின் கைப்பிடிச் சுவர்களில் உள்ள இடைவெளியை அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.