திருப்புவனம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே புதன்கிழமை இரவு மணல் கடத்திய லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே புதன்கிழமை இரவு மணல் கடத்திய லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் சேது தலைமையில் போலீஸார் காஞ்சிரங்குளம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை மடக்கி நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அருகேயுள்ள வைகை ஆற்றுப் பகுதியிலிருந்து அந்த லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் லாரியை பறிமுதல் செய்தனர். லாரி உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.