முகப்பு
சிவகங்கை

மானாமதுரை  சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஆடி வெள்ளி திருவிளக்கு பூஜை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மேட்டுத்தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அப்பன் சீனிவாச பெருமாள் கோயிலில் ஆடி முதல் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு இரவு திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
மானாமதுரை அப்பன் சீனிவாச பெருமாள் கோயிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜை வழிபாடு.
பகிர்:

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மேட்டுத்தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அப்பன் சீனிவாச பெருமாள் கோயிலில் ஆடி முதல் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு இரவு திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.  

திருவிளக்கு பூஜை வழிபாட்டை முன்னிட்டு மூலவர் அப்பன் சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார். அதைத்தொடர்ந்து கோயில் வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த நீண்ட பந்தலில் நூற்றுக்கணக்கான பெண்கள்  திருவிளக்கு ஏற்றி வைத்து பூஜைகள் நடத்தினர். 

மங்களராத்தி முடிந்து அப்பன் சீனிவாச பெருமாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டதும் திருவிளக்கு பூஜை வழிபாடு நிறைவடைந்தது. அதன் பின்  உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன.

முழு கட்டுரையைப் படிக்க →