மானாமதுரை சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஆடி வெள்ளி திருவிளக்கு பூஜை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மேட்டுத்தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அப்பன் சீனிவாச பெருமாள் கோயிலில் ஆடி முதல் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு இரவு திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மேட்டுத்தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அப்பன் சீனிவாச பெருமாள் கோயிலில் ஆடி முதல் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு இரவு திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.
திருவிளக்கு பூஜை வழிபாட்டை முன்னிட்டு மூலவர் அப்பன் சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார். அதைத்தொடர்ந்து கோயில் வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த நீண்ட பந்தலில் நூற்றுக்கணக்கான பெண்கள் திருவிளக்கு ஏற்றி வைத்து பூஜைகள் நடத்தினர்.
இதையும் படிக்க: செங்கல்பட்டு ஸ்ரீ கடும்பாடி சின்ன முத்துமாரியம்மன் கோயில் ஆடி தீமிதி திருவிழா
Advertisement
Advertisement
மங்களராத்தி முடிந்து அப்பன் சீனிவாச பெருமாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டதும் திருவிளக்கு பூஜை வழிபாடு நிறைவடைந்தது. அதன் பின் உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.