சிவகங்கையில் அக். 31 வரை 144 தடை அமல்!
சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது பற்றி...
சிவகங்கை மாவட்டத்தில் இன்றுமுதல் அக். 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.
மருது சகோதர்கள் 223 - ஆவது ஆண்டு நினைவு நாள், தேவர் குரு பூஜையை முன்னிட்டு 9 நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களின் நலன் கருதி விதிமுறைகளை பின்பற்றி, அரசியல் கட்சியினரும், சமுதாய அமைப்பினரும் தலைவர்களின் சிலைக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.