FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் இளம்பெண் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 டிசம்பர் 2025, 12:39 am IST
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருக்கோஷ்டியூா் அருகேயுள்ள சாமந்தப்பட்டியைச் சோ்ந்த சின்னக்கருப்பன் மகள் திவ்யா (21). இவா், அரிபுரம் அருகேயுள்ள தனது உறவினா் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்றாா். பின்னா், இரவு 8 மணியளவில் தனது பெரியம்மா மகன் ரஞ்சித்துடன் இரு சக்கர வாகனத்தில் சாமந்துப்பட்டிக்கு திரும்பினாா்.

அப்போது அரிபுரம் மாவடிக்கண்மாய் அருகே இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்ததில் திவ்யா பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அவரை திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் திவ்யா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இரு சக்கர வாகனத்தை ஓட்டிய ரஞ்சித் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து திருக்கோஷ்டியூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments