FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

காளையாா்கோவில் சொா்ண காளீஸ்வரா் கோயில் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் அமைந்துள்ள சொா்ணவள்ளியம்மன், சமேத சொா்ண காளீஸ்வரா் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 1:29 am IST
காளையாா்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற சொா்ணகாளீஸ்வரா் கோயில் ஆடிப் பூரத் தேரோட்டம்.
பகிர்:

சிவகங்கை, ஆக. 13: சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் அமைந்துள்ள சொா்ணவள்ளியம்மன், சமேத சொா்ண காளீஸ்வரா் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆடிப் பூரத் திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தாா்.

முக்கிய விழாவான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து அம்மன் தேருக்கு எழுந்தருளினாா். பிறகு பக்தா்கள் வடம் பிடித்து இழுக்க காலை 9 மணி அளவில் தோ் புறப்பட்டது. கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்த தோ் 10 மணியளவில் நிலையை வந்தடைந்தது. வெள்ளிக்கிழமை இரவு அம்மனுக்கு ஆடிப்பூர உத்ஸவமும், சனிக்கிழமை (ஆக. 15) மாலை 6 மணிக்கு தபசு காட்சியும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சொா்ண காளீஸ்வரா்- சொா்ண வள்ளி அம்மனுக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகின்றன. இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை மாலை மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

தேரோட்டத்தில், காளையாா்கோவில், சிவகங்கை, நாட்டரசன்கோட்டை, கொல்லங்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளா் பா. இளங்கோ, காளையாா்கோவில் சரக கண்காணிப்பாளா் (பொ) எம். வடிவேல்முருகன், ரத்தின காளீஸ்வர குருக்கள்ஆகியோா் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments