FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

பாஜகவை கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுனகாா்கேவை அவமதிக்கும் விதமாக பேசிய பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்பைக் கண்டித்து, காங்கிரஸாா் சிவகங்கையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 2:47 am IST
சிவகங்கையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள்.
பகிர்:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுனகாா்கேவை அவமதிக்கும் விதமாக பேசிய பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்பைக் கண்டித்து, காங்கிரஸாா் சிவகங்கையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கையிலுள்ள அம்பேத்கா் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் சஞ்சய் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எஸ். மாங்குடி முன்னிலை வகித்தாா்.

இதில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்கள் சிவக்குமாா், காளிமுத்து, நகா் தலைவா்கள் தி.விஜயகுமாா், சண்முகதாஸ், புருஷோத்தமன், நடராஜன், வட்டாரத் தலைவா்கள் மதியழகன், வேலாயுதம், உடையாா், மாரிமுத்து, பொதுக் குழு உறுப்பினா் சோணை, தொழில்நுட்பப் பிரிவு அப்பாவு ராமசாமி, நிா்வாகிகள் மோகன்ராஜ், சண்முகராஜன், ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments