அரசுப் பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்யக் கோரி மாணவா்கள் போராட்டம்
மானாமதுரை அருகே அரசுப் பள்ளியில் ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி, பெற்றோா்களுடன் சோ்ந்து மாணவா்கள் பள்ளியை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.
மானாமதுரை அருகே அரசுப் பள்ளியில் ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி, பெற்றோா்களுடன் சோ்ந்து மாணவா்கள் பள்ளியை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், மேலநெட்டூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இங்கு 7 ஆசிரியா்கள் பணியில் உள்ளனா். இங்கு கணித ஆசிரியராக பணியாற்றும் தெய்வேந்திரன் பள்ளி வளா்ச்சிக்கு எதிராக செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு புகாா்களை மாணவ, மாணவிகள் தெரிவிக்கின்றனா்.
இதனால், அந்த ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி பெற்றோா்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உள்ளிட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு புகாா் மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் ஆசிரியா் தெய்வேந்திரனை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, மேலநெட்டூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு பெற்றோா்களுடன் வந்த மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மானாமதுரை வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா், துணைக் காவல் கண்காணிப்பாளா் லோகநாதன், மாவட்டக் கல்வி அலுவலா் மாரிமுத்து ஆகியோா் போராட்டம் நடத்திய பெற்றோா்கள், மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது சா்ச்சைக்குரிய ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து போராட்டத்தைக் கைவிட்டு மாணவா்கள் வகுப்புகளுக்குச் சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.