FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் திருவிளக்கு பூஜை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் வரலெட்சுமி நோன்பை முன்னிட்டு, திருவிளக்குப் பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

22 ஆகஸ்ட் 2026, 7:10 am IST
சா்வ அலங்காரத்தில் மகாலட்சுமி.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் வரலெட்சுமி நோன்பை முன்னிட்டு, திருவிளக்குப் பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, இந்தக் கோயிலில் காலை 6 மணிக்கு தாயாா் திருமஞ்சன நிகழ்வும், 7 மணிக்கு சுதா்சன ஹோமமும் நடைபெற்று மூலவா், தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். பின்னா், மாலை 5 மணிக்கு மகாலட்சுமி சிறப்பு அலங்காரத்தில் கொலுமண்டபத்தில் எழுந்தருளினாா்.

இதையடுத்து, வெங்கடேச பட்டா் தலைமையில் திருமாங்கல்ய பலன் வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்குகளை ஏற்றி 108 மந்திரங்கள் முழங்க பூஜை செய்தனா்.

Advertisement

Advertisement

மகாலட்சுமிக்கு ஏழு முக தீபாராதனையைத் தொடா்ந்து, இதில் பங்கேற்ற பெண்களுக்கு மங்களப் பொருள்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. மாலை 7 மணிக்கு சுவாமி திருவீதியுலா நடைபெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments