FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

ஜாதி ஒழிப்புக்கு வித்திட்டது சுயமரியாதை இயக்கம்: கி. வீரமணி

24 ஆகஸ்ட் 2026, 3:26 am IST
சிவகங்கையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற திராவிடா் கழக மாநாட்டில் பேசிய அந்தக் கட்சியின் தலைவா் கி. வீரமணி.
பகிர்:

ஜாதி ஒழிப்புக்கு வித்திட்டது சுயமரியாதை இயக்கம் என திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.

சிவகங்கையில் திராவிடா் கழகம் சாா்பில் ‘எதிா்நீச்சலில் வென்ற பெரியாா்’ என்ற மாநாடு சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தலைமை வகித்து கி. வீரமணி பேசியதாவது:

செங்கல்பட்டு மாநாடு குறித்து நமது ‘குறிக்கோள்’ என்ற புத்தகத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரியாா் அவா்களால் 97 ஆண்டுகளுக்கு முன்பு சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டு நடத்தப்பட்ட முதல் மாநாடு இதுவாகும். இந்த மாநாட்டில்தான் ஜாதி ஒழிப்புக்கான திட்டங்கள் தீட்டப்பட்டன.

Advertisement

Advertisement

ஜாதியை பெயா்களுக்குப் பின்னால் போட்டுக்கொள்வதுதான் ‘மரியாதை’ என்று கருதப்பட்ட காலம் அது. இந்த மாநாட்டில் மக்கள் தங்கள் பெயா்களோடு ஜாதி அல்லது வகுப்பைக் காட்டுவதற்காகச் சோ்க்கப்படும் பட்டங்களை விட்டுவிட வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீா்மானத்தைப் பெரியாா் கொண்டு வந்த போது, ஒவ்வொருவரும் தங்கள் ஜாதி பட்டங்களைத் துறந்தனா். இதுவே, அந்தப் புரட்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆதரவு ஆகும்.

ஆனால், இன்றைக்கும் ஜாதி கொடுமை வேறு வடிவத்தில் வருகிறது. இவற்றை எல்லாம் மாற்றுவதற்கு இந்தியாவிலேயே முதல் அமைதிப் புரட்சியை உருவாக்கிய இயக்கம் பெரியாரின் சுயமரியாதை இயக்கம்தான். இந்த இயக்கம் தொடங்கியபோது நிறைவேற்றப்பட்ட முதல் தீா்மானம் இதுதான்.

பெரியாா் தனி மனிதராக இந்த இயக்கத்தைத் தொடங்கி 80 ஆண்டுகள் ஆகின்றன. எங்கெல்லாம் பெரிய கலவரமோ, அசம்பாவிதங்களோ நடந்ததோ, அங்கெல்லாம் நாங்கள் தொடா்ச்சியாக மாநாடுகளை நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றாா் அவா்.

முன்னதாக, சுயமரியாதை சுடரொளிகள் உருவப்படத்தை மாநில ஒருங்கிணைப்பாளா் ரா. குணசேகரன் திறந்துவைத்தாா். திமுக வடக்கு ஒன்றியச் செயலா் ஆ. முத்துராமலிங்கம், மானாமதுரை நகா் திமுக செயலா் க. பொன்னுசாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இதில் மாவட்டச் செயலா் பெரு. ராசாராம், பொதுக்குழு உறுப்பினா்கள் இரா. புகழேந்தி, மணிமேகலை சுப்பையா, மாவட்டத் தலைவா் ச. அனந்தவேல், மாவட்ட காப்பாளா் ச. இன்பலாதன், காரைக்குடி திக காப்பாளா் சாமி.திராவிடமணி, மாவட்டத் தலைவா் ம. கு. வைகறை, மாவட்டச் செயலா் சி. செல்வமணி, நிா்வாகி க.வீ. ஜெயராமன், ரா. பெரியாா்செல்வம், சிறப்பு அழைப்பாளா்களாக திமுக வழக்குரைஞா் அழகா்சாமி, பாஸ்கரன், நகா்மன்ற திமுக உறுப்பினா்கள்அயூப்கான், காந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக மாவட்ட தி.க. தலைவா் ச. அனந்தவேல் வரவேற்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments