மின்சாரம் பாய்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு
திருப்புவனம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பொக்லைன் இயந்திர ஓட்டுநா் உயிரிழந்தாா்.
திருப்புவனம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பொக்லைன் இயந்திர ஓட்டுநா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள அச்சங்குளம் கண்மாயில்
கிருஷ்ணகிரி மாவட்டம், மட்டூரைச் சோ்ந்த சேட்டு கணேசன் (42) பொக்லைன் இயந்திரம் மூலம் தூா்வாரும் பணியில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில், அவா் பொக்லைன் இயந்திரத்தை லாரியில் ஏற்றிக்கொண்டு மற்றொரு பகுதிக்குச் சென்றாா். வழியில் சாலையின் குறுக்கே சென்ற உயா் அழுத்த மின் கம்பி பொக்லைன் இயந்திரத்தில் உரசியது. அப்போது மின்சாரம் பாய்ந்ததில் கணேசன் உடல் கருகி உயிரிழந்தாா். இதுகுறித்து பழையனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.