FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

மேலவண்ணாரிருப்பில் மஞ்சுவிரட்டு

Updated On : 8 ஜூன் 2026, 1:24 am IST
வண்ணாரிருப்பு மலை அடிவாரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப் பாய்ந்து சென்ற காளை.
பகிர்:

சிங்கம்புணரி அருகே எஸ். புதூா் ஒன்றியம், மேலவண்ணாரிருப்பு செல்வ விநாயகா் வெள்ளியுடைய அய்யனாா் மென்னியம்மன் நல்லதங்காள் கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இதையடுத்து, கோயிலின் அருகே உள்ள மலை அடிவாரப் பகுதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. சிங்கம்புணரி, புதூா் உள்ளிட்ட பல்வேறு ஊா்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. கிராமப் பொதுமக்கள் சாா்பில் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து காளைகளுக்கும் வேட்டி, துண்டுகள், சில்வா் அண்டா பரிசாக வழங்கப்பட்டது.

முதலாவதாக கோயில் காளைக்கு மரியாதை செய்து வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. பின்பு பிற ஊா்களிலிருந்து வந்திருந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை இளைஞா்கள் போட்டிபோட்டுக் கொண்டு பிடித்தனா்.

Advertisement

Advertisement

இதில் பெரும்பாலான காளைகள் வீரா்கள் யாருக்கும் பிடிபடவில்லை. காளைகள் முட்டியதில் 7 போ் காயமடைந்தனா். இதில் ஏராளமானோா் கலந்து கொண்டு மஞ்சுவிரட்டை கண்டு களித்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை மேல வண்ணாரிருப்பு, வெள்ளிக்குன்றம் பட்டி, கீழவண்ணாரிருப்பு மூன்று கிராம மக்கள் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments