பெரியகுளத்தில் ஆமை வேகத்தில் கழிவுநீர் கால்வாய் பராமரிப்புப் பணி: பொதுமக்கள் அவதி
பெரியகுளம் காய்கறி சந்தையில் கழிவுநீர் கால்வாய் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பெரியகுளம் காய்கறி சந்தையில் கழிவுநீர் கால்வாய் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பெரியகுளம் காய்கறி சந்தை தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் சந்தைக்கு வந்து செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
மேலும், காய்கறி கொண்டு வரும் வாகனங்களும் வரமுடியாமல் வியாபாரிகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே, கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.