ஸ்கேட்டிங் போட்டி: கல்லூரி மாணவர் வெற்றி
மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி மாணவருக்கு, கல்லூரி நிர்வாகம் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடத்தியது.
மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி மாணவருக்கு, கல்லூரி நிர்வாகம் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடத்தியது.
கோயம்புத்தூரில் ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பில், அங்குள்ள ஸ்வஸ்திகா ஸ்கேட்டிங் வளாகத்தில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநில அளவில் பல்வேறு பிரிவுகளில் ஸ்கேட்டிங் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதில் 16 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் வணிகவியல் துறை முதலாமாண்டு மாணவர் ஜெயபாலாஜி பங்கேற்று, ரிங் 500 மற்றும் 700 மீட்டர் பிரிவில் முதலிடமும், 1000 மீட்டர் பிரிவில் இரண்டாமிடமும் பெற்று 3 பரிசுகளை வென்றுள்ளார்.
இம் மாணவரை கல்லூரியின் தாளாளரும், செயலருமான தர்வேஷ் மைதீன், கல்லூரி முதல்வர் முகமது மீரான் மற்றும் உடற்கல்வி இயக்குநர் அக்பர் ஆகியோர் பாராட்டினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.