பெரியகுளம் அருகே வெறிநாய் கடித்து 6 பேர் காயம்
பெரியகுளம் அருகே புதன்கிழமை வெறிநாய் கடித்ததில் சிறுமிகள் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
பெரியகுளம் அருகே புதன்கிழமை வெறிநாய் கடித்ததில் சிறுமிகள் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
வடுகபட்டியில் புதன்கிழமை மாலை தெருவில் சிறுவர், சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த வெறிநாய் ஒன்று அவர்களை கடித்தது. இதில் வடுகபட்டியை சேர்ந்த வர்ஷா (5), சத்யா (11), ஸ்ருதிகா (9), ரூபன் (5), பத்ரகாளி (65), கார்த்திக் (1) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் பெரியகுளம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தினர் இவர்களை கடித்த வெறிநாயை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இப்பகுதியில் அதிக அளவில் சுற்றித் திரியும் வெறி நாய்களை பேரூராட்சி நிர்வாகம் பிடிக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.