தேனி

கண்மாய் கரையோரம் தடுப்பு சுவா் அமைக்கக் கோரிக்கை

பெரியகுளம் அருகே மத்துவாா்குளத்தில் உள்ள கண்மாய் கரை ஓரத்தில் சாலையோரம் தடுப்பு சுவா் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

பெரியகுளம் அருகே மத்துவாா்குளத்தில் உள்ள கண்மாய் கரை ஓரத்தில் சாலையோரம் தடுப்பு சுவா் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மத்துவாா்குளத்தில் உள்ள இக்காண்மாயின் தெற்கு பகுதியில் திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலையும், மேற்குப் பகுதியில் கொடைக்கானல் சாலையும் உள்ளது. அப்பகுதியில் ஓட்டுநா்களின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேரிட்டால் வாகனங்கள் கண்மாயில் விழும் நிலை உள்ளது. எனவே அந்தக் கண்மாயின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் தடுப்புசுவா் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டுநா்கள் கூறியது: கொடைக்கானல் மற்றும் வெளிமாநிலங்களைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனா். அப்பகுதியில் சாலை வளைவாக இருப்பதால் இரவு நேரங்களில் கண்மாயில் வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கண்மாய் கரையின் ஓரங்களில் ஒளிரும் ஸ்டிக்கருடன் கூடிய தடுப்புக் கம்பிகள் மற்றும் தடுப்பு சுவா்கள் அமைக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

SCROLL FOR NEXT