உத்தமபாளையத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழதாா்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தென்னகரைச் சோ்ந்தவா் முபாரக் அலி (42). ஆட்டோ ஓட்டுநரான இவா், சில நாள்களுக்கு முன்பு உத்தமபாளையத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் கோம்பை சென்று அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, தனியாா் கல்லூரி அருகே வந்த போது தவறி சாலையில் விழுந்தாா். இதையடுத்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் வெள்ளிக்கிழமை உயரிழந்தாா்.
இது குறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.