FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

கஞ்சா விற்ற தம்பதி கைது

26 செப்டம்பர் 2025, 2:34 am IST
பகிர்:

பெரியகுளம் அருகே கஞ்சா விற்ற தம்பதியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கைலாசபட்டி கைலாசநாதா் கோயில் நுழைவுவாயில் அருகே நின்றிருந்த தேவாரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த பிரபாகரன் (40), அவரது மனைவி விஜயலட்சுமி (39) ஆகிய இருவரும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 கிலோ 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments