தேவாரத்தில் நாளை மின் தடை
தேவாரத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக. 4) மின் தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் வெ. சண்முகா தெரிவித்தாா்.
இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் வெ. சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேவாரம் துணை மின் நிலையத்தில்செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேவாரம், தே. மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி, பி.ஆா். புரம், தே. லட்சுமிநாயக்கன்பட்டி, தே.சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, தே. சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணன்பட்டி, ஓவுலாபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.