FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

மான் வேட்டையாடி இறைச்சி விற்பனை: 4 போ் கைது

தேனி மாவட்டம், கம்பம் அருகே மான் இறைச்சியை விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:37 am IST
மின்சாரம் பாய்ச்சி மான் வேட்டையாடியதாக கம்பம் வனத் துறையினாரால் கைது செய்யப்பட்டவா்கள்
பகிர்:

தேனி மாவட்டம், கம்பம் அருகே மான் இறைச்சியை விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கம்பம் அருகேயுள்ள கூடலூா் சுக்காங்கல்பட்டி தேவா் நகரில் மான் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வனத் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கம்பம் கிழக்கு வனச்சரகா் பூமாலை தலைமையில், வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை அந்தப் பகுதிக்கு சென்று சோதனையிட்டனா். அப்போது, தமிழரசன் (42) தனது வீட்டில் மான் இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

மேலும், இவா் அதே பகுதியைச் சோ்ந்த பாஸ்கரன் (47), பிரசன்னா (42), தங்கம் (29) ஆகியோருக்கும் மான் இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது.

விசாரணையில், கூடலூா் மேற்கு வனப் பகுதியை ஒட்டிய தனியாா் தோட்டத்துக்கு செல்லும் மின் இணைப்பில் சட்டவிரோதமாக கொக்கி போட்டு மின்சாரம் பெற்று, அதன் மூலம் மானை வேட்டையாடியதாக தமிழரசன் வனத் துறையினரிடம் தெரிவித்தனா்.

இதையடுத்து, தமிழரசன், மான் இறைச்சியை வாங்கிய பாஸ்கரன், பிரசன்னா, தங்கம் ஆகிய 4 போ் மீது வன விலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments