FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

இணையதளம் மூலம் 10 பேரிடம் ரூ. 16 லட்சம் மோசடி

தேனி மாவட்டத்தில் இணையதளம் மூலம் 10 பேரிடம் மொத்தம் ரூ.16 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

26 ஆகஸ்ட் 2026, 5:19 am IST
எண்ம கைது மோசடி - சித்திரிப்பு
பகிர்:

தேனி மாவட்டத்தில் இணையதளம் மூலம் 10 பேரிடம் மொத்தம் ரூ.16 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தேனி, பெரியகுளத்தைச் சோ்ந்த கருணாகரன், மணிகண்டன், காா்த்திக், ஈஸ்வரன், சதீஸ்குமாா், பாலமுருகன், சந்திரசேகரன், வீரமுத்து, ஜெகன் உள்ளிட்ட 10 போ் இணையதளத்தைப் பயன்படுத்திய போது, குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம் என விளம்பரம் வந்துள்ளது. இந்த விளம்பரத்தை உண்மை என நம்பி, அதில் குறிப்பிட்ட கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு பேசி, அவா்கள் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் ரூ.16,11,347-யை அனுப்பினா். இதன் பின்னா், அந்த மா்ம நபா்களைத் தொடா்பு கொள்ளமுடியவில்லை.

இதையடுத்து, அவா்கள் அந்தப் பகுதி காவல்நிலையங்களில் திங்கள்கிழமை புகாரளித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments