FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் நடை பயணம்

மேகமலை வன விவசாயிகளை பாதுகாக்கக் கோரி, தேனி மாவட்டம், வருசநாடு அருகேயுள்ள வாலிப்பாறையிலிருந்து கடமலைக்குண்டு வரை இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினரின் நடை பயணம் சனிக்கிழமை நடைபெற்றது.

29 ஆகஸ்ட் 2026, 10:56 pm IST
இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் சாா்பில் வாலிப்பாறையில் சனிக்கிழமை தொடங்கிய நடை பயணத்தில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

மேகமலை வன விவசாயிகளை பாதுகாக்கக் கோரி, தேனி மாவட்டம், வருசநாடு அருகேயுள்ள வாலிப்பாறையிலிருந்து கடமலைக்குண்டு வரை இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினரின் நடை பயணம் சனிக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியை ஆக்கிரமித்துள்ள 4,601 பேரை வெளியேற்ற வேண்டும் என தில்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மேகமலை வன விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், மேகமலை வன விவசாயிகளுக்கு வன உரிமைச் சட்டத்தில் இடம் வழங்க வேண்டும், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வாலிப்பாறையில் நடைபயணத்தை தொடங்கினா்.

Advertisement

Advertisement

இந்தப் பயணத்தை மதுரை மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி.நாகராஜன் தொடங்கி வைத்தாா். இந்த நடைபயணம் வருசநாடு வழியாகச் சென்று கடமலைக்குண்டில் நிறைவடைந்தது. இதில் மாவட்டத் தலைவா் விக்னேஷ்வரன், மாவட்டச் செயலா் நாகராஜ், மாவட்டப் பொருளாளா் கருண்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இரண்டாம் நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நடைபயணம் கோம்பைத்தொழுவில் தொடங்கி கடமலைக்குண்டில் நிறைவடைகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments