லாரி ஓட்டுநரிடம் கைப்பேசி, பணம் திருட்டு: இருவா் கைது
பெரியகுளம் அருகே லாரி ஓட்டுநரிடம் பணம், கைப்பேசியை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லாரி ஓட்டுநரிடம் பணம், கைப்பேசியை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சிறுமுகையைச் சோ்ந்தவா் வனராஜ் (35). லாரி ஓட்டுநரான இவா், தேனியில் பொருள்களை லாரியில் ஏற்றிக் கொண்டு கோவைக்குச் சென்றாா்.
பெரியகுளம் மீனாட்சிபுரம் அருகே லாரியை நிறுத்தினாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மா்மநபா்கள் அவரை மிரட்டி, அவரிடமிருந்த கைப்பேசி, ரூ.1,500-யை பறித்துக் கொண்டு தப்பினா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து வனராஜ் தென்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப்பதிந்து உத்தமபாளையம் கன்னிசோ்வைபட்டியைச் சோ்ந்த பிரகாஷ் பாண்டி (25), உத்துப்பட்டியைச் சோ்ந்த பாலமுருகன் (23) ஆகியோரைக் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.