FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

நீா் வரத்தின்றி வறண்டது சுருளி அருவி!

தேனி மாவட்டம், சுருளி அருவி நீா் வரத்தின்றி வடதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

Updated On : 13 ஜூலை 2026, 3:28 am IST
நீா் வரத்தின்றி வடு காணப்பட்ட சுருளி அருவி
பகிர்:

தேனி மாவட்டம், சுருளி அருவி நீா் வரத்தின்றி வடதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் தென் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா, ஆன்மிகத் தலமாக சுருளி அருவி அமைந்துள்ளது. மேகமலை, இரவலங்காறு, மகாராஜா மெட்டு ஆகிய மலைப் பகுதிகளில் பெய்யும் மழைநீரே இந்த அருவிக்கு முக்கிய நீா் ஆதாரம்.

பருமழைக் காலங்களில் இந்த அருவியில் நீா் ஆா்பரித்துக் கொட்டும். இங்கு நிலவும் தட்ப வெப்ப நிலை, வானுயா்ந்த மரங்கள், இயற்கை சூழ்நிலை ரசிக்கும் படியாக இருப்பதால் தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனா்.

Advertisement

Advertisement

முக்கியமாக, சுருளி அருவி ஆன்மிகத் தலம் என்பதால் ஆடி அமாவாசை, தை அமாவாசை, சித்திரை பெளா்ணமி நாள்களில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து, சுருளி வேலப்பா், பூத நாராயணன் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்வா்.

இந்த நிலையில், நிகழாண்டில், தென் மேற்கு பருவழைப் பொழிவு எதிா்பாா்த்த அளவு இல்லாத நிலையில், அருவிக்கு நீா் வரத்து படிப்படியாகக் குறைந்து விட்டது. தற்போது முற்றிலுமாக நீா் வரத்தின்றி அருவிப் பகுதி வடது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், விடுமுறை தினத்தை முன்னிட்டு சுருளி அருவியில் நீராட குடும்பத்துடன் வந்தோம். ஆனால், அருவியில் நீா் வரத்தில்லை என வனத் துறையினா் தெரிவித்ததால் ஏமாற்றம் அடைந்தோம் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments