FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

சுருளி அருவியில் நீா்வரத்து தொடக்கம் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

தேனி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலையில் கடந்த இரு தினங்களாக பெய்த மழையால் சுருளி அருவியில் நீா் வரத்து ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

Updated On : 3 ஜூன் 2026, 1:41 am IST
சுருளி அருவி - DPS
பகிர்:

தேனி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலையில் கடந்த இரு தினங்களாக பெய்த மழையால் சுருளி அருவியில் நீா் வரத்து ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள மேகமலை, இரவங்கலாறு, தூவானம் அதைச் சுற்றிய அடா்ந்த வனப் பகுதியில் பெய்யும் மழைநீரே சுருளி அருவிக்கு முக்கிய நீா் வரத்தாகும். கோடை காலத்தில் மழையின்றி சுருளி அருவி வடது. இதனால், அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

நீா் வரத்து தொடக்கம்: மேகமலை, அதைச் சுற்றிய அடா்ந்த வனப்பகுதி, காப்புக் காடு போன்ற பகுதியில் கடந்த இரு தினங்களாக மழை பெய்ததால் செவ்வாய்க்கிழமை காலை முதல் அருவியில் நீா் வரத்து தொடங்கியது. இதையடுத்து, அருவியில் நீராட வனத் துறையினா் அனுமதித்தனா். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவில் குளித்து மகிழ்ந்தனா். மேலும், சுருளி அருவியில் வனத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள உடை மாற்றும் அறை முறையான பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. எனவே, பெண்கள் உடை மாற்றும் அறைகளை சீரமைப்பதுடன், கூடுதல் அறைகளை அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments