சிவகிரி அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் தீ
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் பரவிவரும் தீயைக் கட்டுப்படுத்த வனத்துறையினா் போராடி வருகின்றனா்.
சிவகிரி அருகே உள்ளாறு பகுதிக்கு மேற்கே கருப்பசாமி கோயில் வனப் பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு திடீரென தீப்பிடித்தது.
காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பல்வேறு இடங்களுக்கும் பரவியது. அதையடுத்து, சிவகிரி வனச்சரகா் கதிரவன் தலைமையில் வனத்துறையினா் சென்று தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.