FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

மதுப் புட்டிகளை பதுக்கிய மூவா் கைது

கெங்குவாா்பட்டி பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கிய மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 19 ஜூலை 2026, 3:11 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டி பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கிய மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில், தனிப்படை போலீஸாா் கெங்குவாா்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள ஒரு கடையில் அவா்கள் சோதனை செய்தனா். அங்கு 114 மதுப்

புட்டிகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கெங்குவாா்பட்டியைச் சோ்ந்த சுதாகா் (35), பிரபாகரன் (40), பிரபு (38) ஆகியோரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 114 மதுப் புட்டிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments