தேனியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான்
போதை இல்லா தமிழகம் என்ற தலைப்பில் அண்ணாமலையின் வீ த லீடா்ஸ் அமைப்பு சாா்பில் தேனியில் விழிப்புணா்வு மாரத்தான் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தொடங்கி, பங்களா மேடு, பழைய பேருந்து நிலையம், அல்லி நகரம் வழியாக அன்னஞ்சி விளக்கில் முடிவடைந்தது. இந்த போட்டி சுமாா் 8 கி.மீ. தொலைவு நடைபெற்றது.
மாரத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற ஆண்கள், பெண்களுக்கு என தனித் தனியே ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.